Thursday, October 9, 2014

இராவண காவியம்

கதைக்கு கால் இல்லை என்பார்கள். இது காப்பியம், புராணம் போன்ற பெரும் கதைகளுக்கும் பொருந்தும்.

அதே சமயம், ஒவ்வோரு கதையிலுல் ஒரு அரசியல் உள்ளிருக்கும். கதையைப் படிக்கும் போது அதன் பின்னனியில் இருக்கும் அரசியலையும் புரிந்து கொண்டு படிக்கவேண்டும். நாம் சார்ந்திருக்கும் ஒரு குழுவையோ அல்லது நாம் சார்ந்திருக்கும் சித்தாந்தத்தையோ இழிவு செய்யும் கதைகளை அடையாளம் கண்டு கொண்டு அந்த புரிதல் அவசியும்.

இந்திய துனைக்கண்டத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான புராணங்களை எடுத்துப் பார்த்தால் அவற்றில் அடிநாதமாக இருப்பது ஆரிய திராவிட இனப்போராட்டம்தான். நம்பவில்லை என்றால் இந்த கண்ணோட்டத்தை வைத்துக்கொண்டு ஒவ்வோரு கதையையும் படித்தப் பாருங்கள்.

உதாரணத்திற்கு இராமாயணத்தை எடுத்துக்கொள்ளுங்கள், இதில் வடக்கே இருக்கும் ஆரியர்களுக்கும்(இராமன் குழு) தெற்கே இருக்கும் திராவிட குழுவிற்கும்(இராவணன் குழு) நடக்கும் போராட்டம்தான்.

நம் இனத்தை வெற்றி கொண்டு பெருமைப்படும் ஒரு காப்பியத்தை தமிழன் படிக்கும் போது கோபம் தானே வரவேண்டும். ஆனால் தன் இனத்தின் தோல்விக்காவியத்தை படித்து சுவைத்தக்கொண்டிருக்கிறான் தமிழன்!!!

கம்பனின் தமிழ் புலமைக்காக படிக்கிறேன் என்று சிலர் சொல்லலாம். படியுங்கள், தமிழ் சுவையை ரசியுங்கள் ஆனால் இந்த கதையின் பின்புலத்தில் இருக்கும் அரசியலையும் கவனித்தில் கொண்டு படியுங்கள்.

என்ன செய்வது, இராமாயானத்தை தமிழ் எழுத கம்பனை ஸ்பான்சர் செய்த சடையப்ப வள்ளலுக்கு இந்த அரசியல் புரியாமல் போய்விட்டது. அவருக்கு புரிந்திருந்தால், நம் இனத்தலைவனாகிய இராவணனை முன்னிலைப்படுத்தி கம்பனை காவியம் எழுத வைத்திருப்பார்.

அந்த குறை புலவர் குழந்தை அவர்களால் ஓரளவிற்கு தீர்க்கப்பட்டது. புலவர் குழந்தை இராவண காவியத்தை எழுதினார்.

இதோ அதன் விபரம் http://ta.wikipedia.org/s/ch3

இராவண காவியம் ஒரு தமிழ் கவிதை நூல். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. இதை இயற்றியவர் புலவர் குழந்தை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் எழுதப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.

இராவண காவியம் படிப்போர் இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் போற்றும் படியும், இராம, இலக்குவர்களையும் மற்றவர்களையும் வெறுக்கும் படியும் புலவர் குழந்தை திறம்பட பாடியுள்ளார். இக்காவியத்தை வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாக சித்தரிக்கிறது. இந்த நூல் சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948 - ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் தேதி தடைசெய்யப்பட்டது. 1971ம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.


இராவண காவியம் தமிழ் இணையக் கல்விக்கழகத்திலும் ஒரு பாடமாக வைத்திருக்கிறார்கள்; http://www.tamilvu.org/courses/degree/a011/a0114/html/A0114331.htm

தமிழர்களே இராமாயண கதைகளை நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க நினைப்போர், அதற்குப் பதிலாக இராவணகாவியத்தை நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க முயற்ச்சிப்போம். இராவணகாவியத்தை கார்ட்டூன் வடிவில் கொண்டுவரவேண்டும்.
இராவண காவியத்தைப் பற்றி சொற்பொழிவாற்றி தமிழரிடையே பரப்ப தமிழறிஞர்கள் முன்வரவேண்டும்.